Wednesday, June 23, 2021

 MORINGA POWDER


    Moringa powder price in Sri Lanka-14900/=

 

   WhatsApp-075-3158980/+94753158980.

Island wide Delivery Available.

முருங்கை ( Moringa Powder )

 

முருங்கை இவ்ளோ நல்லதா...

முருங்கைக்கீரை இதை மூலிகை கீரை என்றும் சொல்லலாம். வீட்டுக்கு வீடு மரம் வளர்த்த காலங்களில் முருங்கை இல்லாத உணவு இல்லை என்றும் சொல்லலாம். முருங்கைக்கீரை பொரியல், முருங்கைக்கீரை சாம்பார், முருங்கைக்கீரை கூட்டு, முருங்கைக்கீரை மசியல், முருங்கை காம்பு சூப் என்று கீரைகளில் வித வித உணவுகள் செய்து வந்தார்கள். முருங்கை கீரை மட்டும் அல்லாமல் முருங்கைக்காய், முருங்கைப்பூ, முருங்கை காம்பு, முருங்கை மரப் பட்டை என்று எல்லாமே மருத்துவகுணங்களையும் கொண்டிருக்கிறது.

மூலிகை குணங்களை கொண்டிருக்கும் பல்வேறு தாவரங்களிலிருக்கும் பொடியை தேநீராக்கி குடிப்பது அதிகரித்துவருகிறது. அது போலவே முருங்கைகீரையை பொடி செய்தும் தேநீர் தயாரித்து குடிப்பதும் அதிகரித்துவருகிறது. நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் இந்த பொடியை வீட்டிலும் தயார் செய்து பயன்படுத்தலாம்.

   ​முருங்கைக்கீரை


நூற்றுக்கும் மேற்பட்ட கீரைகள் புழக்கத்தில் இருந்தாலும் தற்போது 40 வகையான கீரைகள் தான் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பிட்ட வகை கீரைகளின் பலன்கள் பன்மடங்கு சக்தி தரக்கூடியவை

வயித்து புண்ணை குணமாக்கும் இந்த கீரையை சாப்பிடறீங்களா இனிமே சாப்பிடுங்க!


இந்த கீரையில் ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி,வாழைப்பழத்தை காட்டிலும் அதிக பொட்டாசியம், கேரட்டை காட்டிலும் அதிகளவு வைட்டமின் ஏ, பாலேடை விட இரண்டு மடங்கு புரதம். இரும்பு, பாஸ்பரஸ், அமினோ அமிலங்கள் என பல சத்துகளை உள்ளடக்கியிருக்கிறது.

​என்னவெல்லாம் பலன்

முருங்கை மூளையை ஆற்றலோடு செயல்பட வைக்க உதவுகிறது. இவை நீரிழிவு, இதய நோய், உடல் பருமன், நரம்பு தளர்ச்சி, ரத்த அழுத்தம் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் மூன்று முறை இந்த கீரையை சாப்பிடலாம். குறிப்பாக ஹீமோகுளோபின் குறைபாடு கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த உணவு என்றால் அது முருங்கைக்கீரை என்றே சொல்லலாம்.

தொடர்ந்து இந்த கீரையை சாப்பிடும் போது குறிப்பிட்ட அளவு ஹீமோகுளோபின் உயர்ந்திருப்பது கண்டறியலாம். முருங்கைக்கீரை கிடைக்கலையே என்பவர்கள் முருங்கை இலை கிடைக்கும் போது அதை பக்குவப்படுத்தி வைத்து கொண்டால் அன்றாடம் பயன்படுத்தலாம் முருங்கை இலை பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

தேநீருக்கு மட்டுமல்ல



(தினமும் காலை நேரங்களில் மட்டும்) ஒரு தம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டீஸ்பூன் முருங்கை இலை தூளை சேர்த்து அடுப்பை அணைத்து 2 நிமிடங்கள் கழித்து (தேவையெனில் வடிகட்டி) இனிப்புக்கு பனங்கருப்பட்டி சேர்த்து குடித்து வரலாம். தினமும் ஒரு கப் போதுமானது. முருங்கைக்கீரையை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் என்றாலும் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவது சிறந்தது.


குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேநீராக கொடுத்தால் குடிக்க மாட்டார்கள். சூடான சாதத்தில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து நெய் கலந்து சிட்டிகை மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து கொடுக்கலாம். சிறு கசப்பு தெரியாமல் இருக்க கடுகு, உ.பருப்பு, வரமிளகாய் சேர்த்து கலந்து கொடுக்கலாம். கசப்பு தெரியாது.


சுளுக்குக்கு பிளாஸ்டர் வைத்தியமா. இதை செய்யுங்க.. சுளுக்கு சட்டுன்னு விட்டுடும்..


ரசம் வைக்கும் போதும், சாம்பார் வைத்து இறக்கும் போது ஒரு டீஸ்பூன் முருங்கை பொடியை தூவி இறக்கலாம். எபப்டி இருந்தாலும் முருங்கைக்கீரையை அப்படியே பறித்து சமைத்து சாப்பிடுவது போல் இருக்காது. ஆனால் கீரை அதிகம் கிடைக்காத நேரங்களிலும் கீரை சாப்பிடாதவர்களுக்கும் இந்த முறை அருமருந்தாக இருக்கும்.

Author Name :- Mohammed Ihsan.

WhatsApp-0753158980/+94753158980.




              Click here to buy Moringa powder...